Monday, January 26, 2009

காதல் வாழ்க!




மௌனம் அழகு தான்..
நீ என் அருகில் இருக்கும் வரை!




கண் இமைகளும் சுமை தான்..
விழித்ததும் உன்னை காணும் வரை!





தனிமை இனிமை தான்..
என் மனதில் நீ வசிக்கும் வரை!






கண்ணீரும் சுகம் தான்..
நீ என்னை பிரியாத வரை!




பெண்மை மென்மை தான்..
உன் கைகள் என்னை தீண்டும் வரை!





கனவுகள் தொல்லை தான்..
நீ அதில் வராத வரை!







என் உயிரும் எனது தான்..
நம் காதல் வாழும் வரை!

Tuesday, December 30, 2008

Goodbye 2008! :)


Hi Friends,

இதுல வர்ற கேரக்டர்ஸ் எதுக்கும் பேரு ஊரெல்லாம் சொல்லலை... ஆனா படிக்கறவங்களுக்கு தானா புரியும்.


If u know me and then u will know what I mean :)


2008 முழுவதும் பல மாற்றங்கள்...

ஏமாற்றம்,
தடுமாற்றம்,
மனமாற்றம்,
இடம் மாற்றம்.

புது நண்பர்கள்.. புதிரான வாழ்க்கை.
புரியாத நட்பு.. புரிந்ததால் பிரிந்த உறவு.

ரகசிய சிநேகிதம்.

குழப்பங்கள் எவ்வளவு இருந்ததோ அதே அளவு கும்மாலமும் :D

ஏகப்பட்ட புது அனுபவங்கள்.

கடவுளோட தரிசனத்துக்காக ஏங்கிட்டு இருக்கற பக்தர்கள் போலவே நானும் வாழ்க்கைல almost impossible- ஆன விஷயம் நடக்கனும்னு ஏங்கிட்டு இருந்தேன்..

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்னு அடிக்கடி என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன். ஒரு விஷயம் ஆசைப்பட்டு அது நடக்கனும்னா விடாம அடைய முயற்சி பண்ணிட்டே இருக்கனும். அப்போ தான் அது நமக்கு கிடைக்கும். Recently என் smart அண்ணன் recommend பண்ணி 'The secret' னு ஒரு புக் படிச்சேன். I take this moment to thank him for that.. because அவ்ளோ encouraging புக் அது. வாழ்க்கைல உனக்கு இது கிடைக்கனும்னு நீ நினைச்சா.. கண்டிப்பா அது உனக்கு கிடைக்கும்னு உசுப்பேத்தி விட்ட புக் :)

என் அனுபவம்ல சொல்றேன். I got what I want.. and I am confident that I will get if I want :)

என்ன விஷயம்.. எப்படிப் பட்ட விஷயம், நல்லதா, கெட்டதா இதெல்லாம் முக்கியம் இல்லை.. if u are happy and if by u being happy if others are happy and as long as it does not affect anyone personally...Just Go for it!!!

என் குருவான கோபிநாத் சச்சிதானந்த சுவாமிகள் அடிக்கடி சொல்றது தான் நானும் இங்க சொல்லிக்க விரும்பறேன்.. "போன பஸ்ஸுக்கு கை காமிச்சு பிரயோஜனம் இல்லை" :)

2008 உங்க எல்லாருக்கும் எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை.. let 2009 be Yours!


If you want something you never had, do something you have never done...

Don't go the way life takes you.
Take the life the way you go .
And remember you are born to live and
not living because you are born.


Forgettable events beginning of the year நடந்திருந்தாலும்.. unforgettable events end of the year நடந்தது.. which means life goes on no matter what... life-ல எதுவுமே நிரந்தரம் இல்லை.. "இதுவும் கடந்து போகும்" என்ற இந்த 3 வார்த்தைய எப்பவும் நியாபகம் வெச்சிக்கோங்க...


Everything in life is temporary coz everything changes!!!! :)


Say a Big Goodbye to 2008 and Open Hearted da welcome 2009.. எதுவா இருந்தாலும் ஒரு கை பாத்துரலாம் :)

Happy New year to all!
Have a Great Year ahead!

உங்கள்,
ஷாலினி.

Monday, September 22, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 2


ஹாய் பிரண்ட்ஸ்..

சொந்த செலவுல சூனியம் னா என்னனு தெரியுமா? g3 தவிர வேற யாருக்கு எல்லாம் தெரியலையோ கைய தூக்குங்க.. 1..2... ம்ம்ம்.. இதை படிக்குற நாலு பேருல ரெண்டு பேருக்கு என்னனு தெரியாதுனால let me explain....

உங்களுக்கு சொந்தமான இந்த பொன்னான நேரத்தை என் மொக்கை போஸ்ட் படிக்க செலவு பண்றீங்க பாருங்க.. இது தான் அர்த்தம்..

p.s g3 மட்டும் ஏன் டீல்ல விட்டேன்னு அவ கிட்ட தயவு செஞ்சி கேட்டுராதீங்க..:P

பஞ்ச் பண்ணி பல மாசம் ஆச்சு.. டச் வுட்டு போனதால திஸ் டைம் என் பஞ்ச் கொஞ்சம் சாப்டா இருக்கும்.. அட்ஜஸ்ட் கரோ... ;)


here I Go... புலிக்கு பசிச்சாலும் புல்லை திங்காது.. சரி.. சரி.. இது தெரிஞ்ச விஷயம் தான், but புலிக்கு பசிச்சாலும் பேப்பரை திங்காது.. இது தெரியுமா? தெரியாதுல்ல.. இன்னொரு விஷயம்.. புலிக்கு பசிகாட்டியும் இந்த இரண்டையும் திங்காது.. பிகாஸ் புலி பசிகாம தின்னாது.. மண்டைக்குள்ள போச்சா சொன்னது?
நல்லது...



ஊர் குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகாது.. ரைட் தான்.. but ஊர் குருவி உயரமா பறக்காட்டியும் பருந்து ஆகாது.. note this point.. இன்னொரு விஷயம்.. ஊர் குருவி பறக்காட்டியும் பருந்து ஆக முடியாது.. because it is a ஊர் குருவி.. அதுக்காக city குருவி பறந்தா பருந்து ஆகுமான்னு எல்லாம் கேட்டா நான் டென்சன் ஆயிருவேன்.. இன்னொன்னு சொல்றேன்.. நல்லா கேட்டுகோங்க.. விஜய் குருவி ஆகலாம்.. ஆனா, குருவி விஜய் ஆகமுடியாது.. விளங்குச்சா? இல்லை இன்னும் விளக்கனுமா?


காற்றுள்ள போதே தூற்றிகொள்.. அது சரி.. கைல மேட்டர் வச்சிக்கிட்டு காத்துக்கு வெய்ட் பண்ணா வயசு ஆயிடும்.. இல்ல காத்து வரப்ப கைல மேட்டர் இல்லேனாலும் வெளங்கிடும் .. சோ, நான் என்ன சொல்ல வரேன்னா.. கைல மேட்டர் வந்த உடனே.. மொதல்ல போய் ஒரு fan வாங்கணும் (இல்லாதவங்களை சொன்னேன்) எப்போ எல்லாம் காத்து வேணுமோ அப்போ எல்லாம் ஆன் பண்ணுங்க.. சிம்பிள் மேட்டர்.. ஒகே.. அப்போ காத்து வாங்கும் போது கைல மேட்டர் இல்லேனா என்னே பன்றதுன்னு யோசிக்கலாம்.. அதுக்கும் ஒரு ஐடியா வச்சிருக்கேன்.. மேட்டரை ரெடி பண்ணுங்க.. அம்புட்டுதான்... :P


கந்தை ஆனாலும் கசக்கி கட்டு.. குட் பாயின்ட்.. பிகாஸ், அயர்ன் பண்ற வேலை மிச்சம்.... அதுக்காக இந்டர்வியூ போகும் போது , வேலைக்கு போகும் போது இந்த பாலிஸிய பாலோவ் பண்ணுவேன்னு அடம்பிடிக்க கூடாது.. அந்த மாதிரி நேரத்துல கந்தை கசக்கி இருந்தாலும் அயர்ன் பண்ணி கட்டுன்னு மாத்திக்கணும்.. ;)


காப்பி பேஸ்ட் ஷாலினி னு பேரு வந்துற கூடாதுனு சொந்தமா ஒரு பழமொழி.. எஸ்.. எஸ்.. சொந்த சரக்கு தான்..


கடலைய கம்மியா போடணும்..மொக்கைய முழுசா போடணும்..
பிகாஸ்.. கடலைய நிறைய போட்டா வயிறுக்கு நல்லது இல்ல.. மொக்கைய கம்மியா போட்டா வாழ்க்கைக்கு நல்லது இல்ல.. ச்சே.. ஷாலினி நீ எங்கயோ இருக்க வேண்டிய ஆளுன்னு வுச்சு கொட்றது எனக்கு கேக்குது.. இட்ஸ் ஓகே.. நோ ஹார்டு பீலிங்க்ஸ்..

சொன்ன எல்லா தத்துவத்தையும் தத்து எடுத்து பாலோவ் பண்ணுங்க.. ரொம்ப நல்லா உருப்பட்ருவீங்க.. சந்தோசமா இருங்க... லைப்பை என்ஜோய் பண்ணுங்க.. வரட்டா..

அய்யோ.. அய்யோ.. என்ன இது, என்னவோ என்கிட்டே கடன் வாங்கின மாரி வட்டியும் முதலுமா ரியல் பஞ்சை போட்டி போட்டு திருப்பி தரீங்க.. பன்சர் ஆயிருவேன் போல இருக்கே..


This is my 13th post! I specially dedicate this to my Guru Gops! :)

நா எஸ்கேப் டா சாமி..

Monday, September 01, 2008

பூவுக்கு பிறந்த நாள் :)

Hi Friends, எப்படி இருக்கீங்க? இதயம் பேசுகிறேன்னு சொல்லிட்டு இப்படி heart beat நின்ன மாறி silent ஆகராலே னு யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க.. இருந்தாலும் reason சொல்லாட்டி என் தலை வெடிச்சுரும்.....

தலைவர் அன்னிக்கு சொன்ன மாறி.. நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை.. வேறே ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்லை.. :P


இன்னைக்கு என்னோட best friend பிறந்த நாள்... thought of sharing the peelings I have for her...so, அதோட விளைவு தான் நீங்க இப்போ படிக்க (படிச்சு முடிச்சுட்டு commentalaye என்ன அடிக்க) போறது.... :P


*cough* *cough* பொய் சொல்றவங்களுக்கு தண்ணி கூட கிடைக்காதுனு சொல்வாங்க....mmm..சரி, anything for my G3 ;)

Here I go....

என்றென்றும் புன்னகை முகத்தோடு...



எதையும் தாங்கும் இதயத்தோடு...







கேடியானாலும் innocent லூக்கோடு...









'வரும்போது பாத்துக்கலாம்' policyodu...







இவ formல இருந்தா மொக்கைகள் போடுவா சக்கைபோடு..











இவ கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் கழியும் சந்தோஷத்தோடு..







இவள் பேச்சு தேன் சுரக்கும் கூடு..






தினமும் என் நாள் துவங்கும் இவள் GM sms sodu..







இவ தான் நம்ப ஆளு..

..G3 என்ற பெயரோடு எல்லோர் மனதிலும் அன்போடு வளம் வரும் ஒரு அழகிய பூக்காடு.










அப்படி போடு.. இப்படி போடு..g3 பிறந்த நாளான இன்று..
சத்தமா ஒரு 'ஓ' போடு !

Many More Happy Returns of the Day my chweeeeeeeeeet girl. :)


என்னடி கன்னத்துல கைய வச்சுட்டு லுக்கு விடுற..இதுக்கெல்லாம் வேர ஆள பாரு ;) உ....உ...ஊது மா என் 3gms தங்கமே! :)




wait a Jecondu...... make a wish and blow the candles... :)




கொக்கா!!!!!!! மக்க!!!!! wisho-o-wishu போல ;)



g3 cake-க ஊதியே காலி பண்றதுக்கு முன்னாடி யாரவது அவள அமுக்குங்க.. நம்ப cake-க அமுக்கலாம் :P



Have a Fabulous day! May ur wishes come true in the coming years and have a great year ahead! :)




வாழ்வின் திசை மாறும், பாதைகளும் மாறும்.
சொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்.
என்றும் என்றென்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே......... (copy pasted from some song) Dedicated to My G3...:)







Shalini...








Tuesday, May 27, 2008

இவர் தான் அந்த அவர்

சொல்ல போறேன்.. சொல்லிடறேன்.... சொல்லிட்டேன்.. :P

இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..
குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)
இவரு தான் நம்ம இராகவன் ஜி!!

மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P

இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)

Happy Birthday anna :)
Murugan arulaala enaikum neenga santhoshama vaazhanum nu ellar saarbulayum vaazhthuren :)
Enjoy and Keep Smiling :)
Shalini.

இந்த நாள் இனிய நாள்

வணக்கம்!!

ஆமாங்க இந்த நாள் இனிய நாள். because இன்னைக்கு ஒரு சிறந்த மனிதரின் பிறந்த நாள் :) என்ன பேந்த பேந்த முழிக்கறீங்க? அந்த great personality யாருன்னு கண்டு பிடிக்க தான் இந்த பதிவு போட்டிருக்கேன். It is a great pleasure and honor for me to put this post for him on his birthday...:)

சரி ரொம்ப பீட்டர் விடாம மேட்டருக்கு வறேன்.. இதுல நிறைய சிறப்புகள் இருக்கு. சும்மா போஸ்ட் படிச்சிட்டு as usual கும்மி அடிச்சிட்டு போகாம.. கொஞ்சம் மூளைக்கும் வேலை. இன்னொன்னு first யாரு இவர கண்டு பிடிச்சு சொல்றாங்களோ அவங்களுக்கு இதுல எத்தனை கமெண்ட்ஸ் வருதோ அத்தனை rupees நான்ன் அவிங்களுக்கு அனுப்பி அவங்க கையாலயே அவங்களுக்கூ தெரிந்த orphanage school க்கு donate பன்ற பாக்கியம் கிடைக்கும் :) this is my gift to this sweet person on earth :)



நல்லா உத்து பாருங்க. இப்படி ஒரு கூர்மையான பார்வையும்.. அழகான சிரிப்பும்.. பால் வடியும் முகமும் வேற யாருக்கு இருக்க முடியும்...:)

anyways, puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்.. என்ன இதுல வித்தியாசம் னா clues தான் இதுல puzzle :P

so எல்லாரும் ready ya...hands on the mouse..get set...go... :P

1. சிறந்த மனிதர்னு நான் சொன்ன்னதும் உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P இது தான் first clue.

2. இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P (jecondu clue)

3.he is very sweet but திகட்டாது... he is sometimes strict but வெறுக்காது.. :)

4. எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்தில இல்லையேனு வேதனை படும் அதே சமயம்.. அடுத்த ஜென்மத்துல இவரு தான் என் அண்ணனா வரணும்னு வேண்டும் இவரை நல்லா தெரிந்த மனங்கள்.

5.லொள்ளுல இவரை அடிக்க இது வரை யாரும் பொறக்கல..at the same time ஜொள்ளுல இவரை அடிக்காத ஆளே இல்லை! ..because இவர் ஜொள்ளு விட தெரியாத அப்பாவி.

6.தன்னடக்கத்த அடக்கம் எல்லாம் பன்னாம அடக்கமா வெச்சு இருப்பவர்... அதே போல தன்னம்பிக்கையோட இடட்து கண்ணாவும்.. தன்மானத்த வலது கண்ணாவும் நினைக்கிற ஒரு தங்க மனிதர்.

7.இவரோட எழுத்தாற்றல் பத்தி சொல்ல எனக்கு வயசும் பத்தாது.. தமிழ்ல இருக்கும் வார்த்தையும் பத்தாது.. இவரு யாருன்னு தெரிஞ்சதும் உங்களுக்கே புரியும்...

8. இவரு கைல வேலு ஒன்னு தான் மிஸ்ஸிங்.. அது இருந்தா இவரு பக்கா சாட்சாத் அந்த முருக பெருமானே தான் minus வள்ளி தேவயானி :P (still eligible but not easily available batchelor)

9.இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P

10.last but not the least இவருக்கு பிடிச்ச நபர்கள் லிஸ்ட் சொல்றேன்.. அவருக்கு most fav persons சொன்னா டக்குனு கண்டு பிடிச்சிடுவீங்க....so அதுனால அதெல்லாம் நான் விட்டுட்டு கஷ்டமான கஷ்டமான clue தரேன் பேர்வழினு பேரு எடுக்க .. இதோ அந்த list...
1.Bernad Knight
2.Rudyard Kipling
3.J.R.R.Tolkien
4.J.K.Rowling
5.Anne Rice
6.Brandan Frazer
7.Sandra Bullock
8. Katherine Heigl
9.James Marsden
10.கண்டிப்பா சரியான கடுப்புல இருப்பீங்க.. இதோ ஈஸி க்ளூ.....எத்தனை பேரு லிஸ்ட்ல இருந்தாலும் இவரு ஒருத்தர் இல்லைனா வாழ்க்கையே இல்லைனு நம்புறவர்....அவர் தான் என் ஆருயிர் நண்பரோட தம்பி முருகர்!!!! :)

இவரை இது வரை நீங்க கண்டுபிடிக்காட்டி நீங்க life ல ஒரு great person மீட் பன்ற சான்ஸ் கைக்கு எட்டின தூரத்துல இருக்குனு நினைச்சு இவரு யாருனு தெரிஞ்சதும் போய் முதல்ல 'ஹாய்' சொல்லுங்க.. மறக்காம birthday wish பன்னுங்க:)

இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)

வரட்டா ;)

உங்கள் ஷாலினி

Saturday, May 24, 2008

யாரிந்த மத்தாப்பு?


யாரிந்த பொண்ணு
அழகான கண்ணு
நம்ம ஊர் மண்ணு
இப்ப தினமும் தின்னுது பன்னு!!!!







அட... அட...... யாருக்கு பிறந்தநாள்! இவங்க பேரை சொன்ன உடனே மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும்! (மத்தாப்பு என்ன சரவெடியா வெடிக்கறதுக்கு அப்படினு எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ்!!!)

ஆமா! நம்ம மனசுக்குள் மத்தாப்பு திவ்யா தான்! May 24 பிறந்த நாள் கொண்டாடும் இவங்களை நாம எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க!