Tuesday, May 27, 2008

இவர் தான் அந்த அவர்

சொல்ல போறேன்.. சொல்லிடறேன்.... சொல்லிட்டேன்.. :P

இது இவரோட சொந்த பஞ்ச் டயலாக் :P

நடிப்புல சிவாஜி..
படிப்புல ராஜாஜி..
சண்டைல நேதாஜி..
பாசத்துல மாதாஜி..
கண்டிப்புல பிதாஜி..
குறும்புல ஜுமாஞ்சி.. :P (இது மட்டும் என்னோட எக்ஸ்ட்ரா பிட்டிங்)
இவரு தான் நம்ம இராகவன் ஜி!!

மலரில் வாசனை போகலாம்
நிலவில் குளுமை போகலாம்
ஆனா உங்க மேல நாங்க வைச்சிருக்கும் பாசம் போகவே போகாது!
சூரியன் மேற்கே வரலாம்
சென்னைல ஸ்நோ வரலாம்
ஆனா நீங்க எங்க மேல வைச்சிருக்கிற நேசம் மாதிரி வரவே வராது! :P

இதுல மேல rhyming க kavidhai என்ற பேருல போட்டா எது வருதோ இல்லையோ மக்களுக்கு என் மெல கொல வெறி வரும்.. சோ வாழ்த்து சொல்லி me the escapeuuu ;)

Happy Birthday anna :)
Murugan arulaala enaikum neenga santhoshama vaazhanum nu ellar saarbulayum vaazhthuren :)
Enjoy and Keep Smiling :)
Shalini.

இந்த நாள் இனிய நாள்

வணக்கம்!!

ஆமாங்க இந்த நாள் இனிய நாள். because இன்னைக்கு ஒரு சிறந்த மனிதரின் பிறந்த நாள் :) என்ன பேந்த பேந்த முழிக்கறீங்க? அந்த great personality யாருன்னு கண்டு பிடிக்க தான் இந்த பதிவு போட்டிருக்கேன். It is a great pleasure and honor for me to put this post for him on his birthday...:)

சரி ரொம்ப பீட்டர் விடாம மேட்டருக்கு வறேன்.. இதுல நிறைய சிறப்புகள் இருக்கு. சும்மா போஸ்ட் படிச்சிட்டு as usual கும்மி அடிச்சிட்டு போகாம.. கொஞ்சம் மூளைக்கும் வேலை. இன்னொன்னு first யாரு இவர கண்டு பிடிச்சு சொல்றாங்களோ அவங்களுக்கு இதுல எத்தனை கமெண்ட்ஸ் வருதோ அத்தனை rupees நான்ன் அவிங்களுக்கு அனுப்பி அவங்க கையாலயே அவங்களுக்கூ தெரிந்த orphanage school க்கு donate பன்ற பாக்கியம் கிடைக்கும் :) this is my gift to this sweet person on earth :)



நல்லா உத்து பாருங்க. இப்படி ஒரு கூர்மையான பார்வையும்.. அழகான சிரிப்பும்.. பால் வடியும் முகமும் வேற யாருக்கு இருக்க முடியும்...:)

anyways, puzzle னா க்ளூ இல்லாமலா.. கண்டிப்பா 10 clues கொடுக்கிறேன்.. என்ன இதுல வித்தியாசம் னா clues தான் இதுல puzzle :P

so எல்லாரும் ready ya...hands on the mouse..get set...go... :P

1. சிறந்த மனிதர்னு நான் சொன்ன்னதும் உடனே நேரு.. காந்தி ரேஞ்சுக்கு யோசிக்காம புத்தர்.. விவேக்கானந்தர் ரேஞ்சுக்கு யோசிக்கனும் :P இது தான் first clue.

2. இவரு விடுற நக்கலு... தண்ணி குடிச்சாலும் அடிச்சாலும் நிக்காம வரும் விக்கலு :P (jecondu clue)

3.he is very sweet but திகட்டாது... he is sometimes strict but வெறுக்காது.. :)

4. எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இந்த ஜென்மத்தில இல்லையேனு வேதனை படும் அதே சமயம்.. அடுத்த ஜென்மத்துல இவரு தான் என் அண்ணனா வரணும்னு வேண்டும் இவரை நல்லா தெரிந்த மனங்கள்.

5.லொள்ளுல இவரை அடிக்க இது வரை யாரும் பொறக்கல..at the same time ஜொள்ளுல இவரை அடிக்காத ஆளே இல்லை! ..because இவர் ஜொள்ளு விட தெரியாத அப்பாவி.

6.தன்னடக்கத்த அடக்கம் எல்லாம் பன்னாம அடக்கமா வெச்சு இருப்பவர்... அதே போல தன்னம்பிக்கையோட இடட்து கண்ணாவும்.. தன்மானத்த வலது கண்ணாவும் நினைக்கிற ஒரு தங்க மனிதர்.

7.இவரோட எழுத்தாற்றல் பத்தி சொல்ல எனக்கு வயசும் பத்தாது.. தமிழ்ல இருக்கும் வார்த்தையும் பத்தாது.. இவரு யாருன்னு தெரிஞ்சதும் உங்களுக்கே புரியும்...

8. இவரு கைல வேலு ஒன்னு தான் மிஸ்ஸிங்.. அது இருந்தா இவரு பக்கா சாட்சாத் அந்த முருக பெருமானே தான் minus வள்ளி தேவயானி :P (still eligible but not easily available batchelor)

9.இவரும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. ரெண்டுக்குள்ள ரெண்டு.. மூனுக்குள்ள ஆயா..இட்லிக்கு தருவாங்க பாயா:P

10.last but not the least இவருக்கு பிடிச்ச நபர்கள் லிஸ்ட் சொல்றேன்.. அவருக்கு most fav persons சொன்னா டக்குனு கண்டு பிடிச்சிடுவீங்க....so அதுனால அதெல்லாம் நான் விட்டுட்டு கஷ்டமான கஷ்டமான clue தரேன் பேர்வழினு பேரு எடுக்க .. இதோ அந்த list...
1.Bernad Knight
2.Rudyard Kipling
3.J.R.R.Tolkien
4.J.K.Rowling
5.Anne Rice
6.Brandan Frazer
7.Sandra Bullock
8. Katherine Heigl
9.James Marsden
10.கண்டிப்பா சரியான கடுப்புல இருப்பீங்க.. இதோ ஈஸி க்ளூ.....எத்தனை பேரு லிஸ்ட்ல இருந்தாலும் இவரு ஒருத்தர் இல்லைனா வாழ்க்கையே இல்லைனு நம்புறவர்....அவர் தான் என் ஆருயிர் நண்பரோட தம்பி முருகர்!!!! :)

இவரை இது வரை நீங்க கண்டுபிடிக்காட்டி நீங்க life ல ஒரு great person மீட் பன்ற சான்ஸ் கைக்கு எட்டின தூரத்துல இருக்குனு நினைச்சு இவரு யாருனு தெரிஞ்சதும் போய் முதல்ல 'ஹாய்' சொல்லுங்க.. மறக்காம birthday wish பன்னுங்க:)

இன்னும் சில மணி நேரங்களில் இவ்வளவு நற்குணங்கள் கொண்ட அந்த நல்ல மனிதர் யாருனு போட்டோ போட்டு சொல்லிடறேன்.. அதுவரை keep guessing :)

வரட்டா ;)

உங்கள் ஷாலினி

Saturday, May 24, 2008

யாரிந்த மத்தாப்பு?


யாரிந்த பொண்ணு
அழகான கண்ணு
நம்ம ஊர் மண்ணு
இப்ப தினமும் தின்னுது பன்னு!!!!







அட... அட...... யாருக்கு பிறந்தநாள்! இவங்க பேரை சொன்ன உடனே மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும்! (மத்தாப்பு என்ன சரவெடியா வெடிக்கறதுக்கு அப்படினு எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ்!!!)

ஆமா! நம்ம மனசுக்குள் மத்தாப்பு திவ்யா தான்! May 24 பிறந்த நாள் கொண்டாடும் இவங்களை நாம எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க!

Friday, May 16, 2008

பஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1





Hi friends, எப்படி இருக்கீங்க? என்ன ஆச்சு? சில பேரு மூஞ்சு உம்முனு இருக்கு (சாலமன் பாப்பையா மாதிரி படிக்கனும் இதை) அட நம்ம G3 ய பாருங்க.. எப்படி சிரிச்ச முகத்தோட படிக்கறாங்க.. சோக கவிதையா இருக்கட்டும், அறுவை ஜோக்கா இருக்கட்டும்.. எதுனாலும் மலர்ந்த தாமரை முகத்தோட படிப்பாங்க.. அவங்களை பார்த்து கத்துக்கோங்கய்யா:P

ஊர்க்கு உபதேசம் பன்னுறதுனா எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. அதுவும் சிக்கல் இருக்கிறவங்களுக்கு உபதேசம் பன்றதுனா சிக்கன் பிரியாணி மாதிரி..:P அவ்ளோ பிடிக்கும்...

சரி நேரா மேட்டர்க்கு வருவோம்... எதுனாலும் வேஸ்ட் பன்னலாம். ஆனா நேரம் மட்டும் வேஸ்ட் பன்னா திரும்ப அத சம்பாதிக்க முடியாது.. அதுனால இதோ short and sweet டா இன்னொரு பதிவு :)


1.வராத பஸ்ஸுக்கு வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வராத டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.
வர பஸ்ஸுக்கு வருகிற டைம்ல வெய்ட் பன்னாலும் கால் வலிக்கும்.

ஏன்னா.. என்னைக்கு பஸ் கரெக்ட் டைம்க்கு வந்து இருக்கு! :P


2.தலையில இருந்து முடி விழுந்தா வழுக்கை.
தூக்கம் வந்து விழுந்தா படுக்கை.
விநாயகர் மூக்கு பேரு தும்பிக்கை.
வாழ்க்கையில எப்பவும் வேணும் நம்பிக்கை :)

3.குப்பைய கூட்டினா பெருக்கல்.
உணவை கூட்டினா உடம்பு பெறுத்தல்.
வாழ்க்கையில கூட்ட கூடாத விஷயம் மத்தவங்க வெறுத்தல்.
ஆனா கூட்டிகிட்டே போக வேண்டிய விஷயம் சிரித்தல்!

4.தலைக்கு மேல இருக்கும் மூன்று விஷயம் எண்ண முடியாது..ஒன்னு நட்சத்திரம்.. இன்னொன்னு தலை முடி..(வழுக்கையா இருந்தாலும் :P) இன்னொன்னு தலை எழுத்து!!!

5.அதே போல மூன்று விஷயம் உணர மட்டும் தான் முடியும்.. பார்க்க முடியாது..
ஒன்னு கடவுள்.. இன்னொன்னு வலி... இன்னொன்னு காதல்..

கடவுளை உணராதவன் நாத்திகன்
வலியை உணராதவன் மாவீரன் (அட.. தலைவர் சொல்லி இருக்காருல... மனுஷனுக்கு தான் வலிக்கும்.. மாவீரனுக்கு வலிக்கவே வலிக்காதுனு!)
காதலை உணராதவன் கொடுத்து வைச்சவன் :P

அப்படினு சொல்லி... இந்த வார உரையாடலை இதோட நிறுத்திக்கிறேன்... இல்லாட்டி கல் மழை பெய்து அத வைச்சு வீடுகட்ட வேண்டியதா போயிடும் :P

வரட்டா! keep smiling and be happy :)

அன்றும் இன்றும் என்றும்,

உங்கள் ஷாலினி :)