Sunday, February 03, 2008

காதல் சுகமானது ???


விரிக்காத வலையில் சிக்கியது நம் இதயம்...
காதலுக்கு கண்ணில்லை,
நம்புவோம்!

நம் நினைவுகள் அழியாச்சுவடுகளாய் இதயங்களில்...
காதலின் காயம்,
வருடுவோம்!

எதையும் தாங்கும் இதயம், நம் பிரிவை தவிர...
காதலின் வலி,
உணர்வோம்!

கைகோர்த்து நடக்கும் பாதையில் தடைக்கற்கள் என்னும் எதிரிகள்...
காதலில் போர்,
வென்றுவிடுவோம்!

திருமணம் ஒரு ஆயுள்தண்டனை...
காதலும் குற்றமாம்,
நாமே சரணடைவோம் !